அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பு
செங்குந்த முதலியார்களை ஒன்று திரட்ட ஏழுச்சி நடையோடு எழுந்த போராட்டம் அதன் கண்ட விளைவுதான் தரணி குமார் அவர்கள் "அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பு" நிறுவினார்.
30.03.2008 அன்று ஏழைகுழந்தைகளுக்கும்,செங்குந்த முதலியார் குழந்தைகளுக்கும் சீருடை வழங்கியதும் மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கியதும் மேலும் பல பணிகள் தனியாக நின்று செய்தார்.
24.04.2011 அன்று அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பு துவங்கப்பட்டது, அதிலிருந்து இன்று வரை பல சோதனைகளை சதானைகளாக மாற்றியும் 36 கிளைகளை துவங்கி அகில இந்திய செங்குந்த முதலியார் கூட்டமைப்பு வளர்ச்சி பாதைக்கு எடுத்து சென்றவர் நமது தலைவர் தரணி குமார்.
சாதனைகள்
1.பெரியவர்களுக்கு பென்சன் வழங்கியது.
2.மாணவ மாணவியர்க்கு கல்வி ஊக்கத்தொகை நோட்டு புத்தகம் வழங்கியது.
3.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவித்தொகை வழங்கியது.
4.திருமணம் ஆகும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கியது.
5.இறுதி சடங்குகளுக்கு உதவித்தொகை வழங்கியது.
6.நமது அமைப்பின் சார்பில் திருமண மண்டபத்திற்கு நிதி உதவி வழங்கியது.
7.கோவில் கும்பாபிஷேகத்திற்கு உதவித்தொகை நீர்மோர் அன்னதானம் வழங்கியது.
8.பள்ளி குழந்தைகளுக்கு சீருடை வழங்கியது.
9.பெண்களுக்கும் இளம் பெண்களுக்கும் சேலை சுடிதார் வழங்கப்பட்டது.
10.டெல்லியில் மருத்துவம் பயில சென்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியது.
11.விளையாட்டு போட்டியாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
12.தியாகி திருப்பூர் குமரன் பிறந்தநாள் அன்று நினைவு ஜோதி கொண்டு வந்த அனைவருக்கும் பனியன் பேண்ட் வழங்கப்பட்டது.
பார்பேற்றும் இவ்வுலகில் ஊர்போற்றும் தரணி குமார் அவர்களின் சாதனைகள் .